100+ Eyes Quotes in Tamil | கண்கள் கவிதைகள்
Discover best kangal kavithai, romantic eye quotes, beautiful eye kavithai images & expressive Tamil quotes for status
கண்கள் தீண்டும் கவிதைகள்
தேனிதழ் கொண்ட தேனே... உன்னிரு விண்மீன் கண்களால், என்னைக் கொல்லாதே!

Beautiful Eyes Quotes In Tamil
உந்தன் விழிப் பார்வையில் வீழ்ந்த என் இதயத்தின் சிறகுகள் படபடவென்று அடித்துக் கொண்டு உந்தன் கருவிழிகளை சுற்றி அலைகிறதடி பெண்ணே!

கருவிழிகள் கவிதை
உன் விழிகள் பேசும் மொழியின் அர்த்தம் புரியாமல் தவிர்த்துக் கொண்டிருக்கிறேன் நான். அதற்கான அகராதியையும் நீயே எழுதிவிடு, உன் கரு விழிகளால்!

Eyes கண் அழகு
எத்தனை முறை உன்னைக் கண்டு ரசித்திருப்பேன். ஆனால், ஒரு முறை கூட என் விழிகளால் உன் விழிகளைக் கடந்து பயணிக்க முடியவில்லை !

Eye கண் அழகு கவிதை
என்ன மாயம் செய்தாயடி? என் விழி வழி அறியாமல் தவிக்கிறது... உன் விழியில்!

காந்தம் போன்ற கண்கள் கவிதை
அவள் கண்கள் மட்டும் தெரியும் புகைப்படங்கள் நிலவை ஆராய்ச்சி செய்த செயற்கைகோள் அனுப்பியது போல் இருக்கும்!

அவள் மான் விழிகள் கவிதை
சிப்பிக்குள் முத்து, மண்ணுக்குள் வைரம்! இவை எல்லாம் தோற்றுப் போகும், அவள் இமைக்குள் இருக்கும் விழிகளுக்கு முன்!

விழிகள் பேசும் கவிதை
கண்களும் பேசும் என்பதை உன் கண்களைப் பார்த்த பின்பு தான் அறிந்தேன்!

மை கண் அழகு கவிதை
கருப்பு மையிட்ட உன் கண்களைக் கண்டதால், எனக்கு கலர் கலராய் கனவுகள்!

கண் பற்றிய கவிதை
இமைகளுக்கு இடையே ஈர்ப்பு விசையை வைத்துகொண்டு எல்லோருடைய உள்ளங்களையும் கவருகிறாயே, நீ என்ன காந்தக் கண்ணழகியா?

Romantic Eyes Quotes In Tamil
காமத்தை அனுபவிக்க ஆயிரம் வழிகள் உண்டு... காதலை அனுபவிக்க உன் இரு விழிகள் மட்டுமே!

Attractive Eyes Quotes In Tamil
மின்னல் தந்த ஒளியை உந்தன் கண்ணில் பார்த்தேன்! எந்தன் இதயம் இழந்து உன் விழியில் தோற்றேன்!

Eye கண் அழகு கவிதை
ஈராயிரம் கதை சொல்லும் இரு விழிகள், இம்சை செய்யுதடி இரவெல்லாம் என்னை உறங்க விடாமல்!

கைது செய்தால் கண்களால் கவிதை
கண்களால் கைது செய்யும் வித்தையை எங்குதான் கற்று வந்தாயோ... கண்டநொடியே கவிழ்ந்துவிட்டேனடி என் கண்மணியே...

மந்திர விழிகள் கவிதை
மனதை ஆளும் தந்திரம் செய்கிறாய், மந்திர விழிகளால்!

காந்த கண்கள் கவிதை
வெள்ளை மேகத்தின் நடுவே ஒரு கருப்பு நிலா, உன் கண்ணில் பார்த்தேன்!

கண் கவிதை வரிகள்
உன் விழிவாள் வேலியிட்டது என் கால்களுக்கு... உன் கண்பார்வையின் எல்லையிலிருந்து மீள முடியாமல்...

என்னவளின் கண்கள் கவிதைகள்
விண்ணில் மின்னித் திரிந்த மின்மினிப் பூச்சிக்கு, சிறிதாய் கருநிறமிட்டு, உன்னில் திரித்தானோ பிரம்மன், விழிகளாக!

Beautiful Eyes Quotes In Tamil
அவள் மைவிழியோடு, கருவிழியை சேர்த்து, கண்ணோடு கண் வைத்து பார்க்கும் போது தான் புரிகிறது, காந்தம் இருப்பது மண்ணிற்க்குள் இல்லை, அவள் கண்ணிற்க்குள் என்று!

அவள் கண்ணு அழகு கவிதை வரி
நம் முதல் சந்திப்பில், உன் உதடுகளை விட அதிகம் பேசியது உன் கண்களே!
