100+ Eyes Quotes in Tamil | கண்கள் கவிதைகள்
மின்னல் தந்த ஒளியை உந்தன் கண்ணில் பார்த்தேன்! எந்தன் இதயம் இழந்து உன் விழியில் தோற்றேன்!
ஈராயிரம் கதை சொல்லும் இரு விழிகள், இம்சை செய்யுதடி இரவெல்லாம் என்னை உறங்க விடாமல்!
கைது செய்தால் கண்களால் கவிதை
கண்களால் கைது செய்யும் வித்தையை எங்குதான் கற்று வந்தாயோ... கண்டநொடியே கவிழ்ந்துவிட்டேனடி என் கண்மணியே...

மந்திர விழிகள் கவிதை
மனதை ஆளும் தந்திரம் செய்கிறாய், மந்திர விழிகளால்!

வெள்ளை மேகத்தின் நடுவே ஒரு கருப்பு நிலா, உன் கண்ணில் பார்த்தேன்!

உன் விழிவாள் வேலியிட்டது என் கால்களுக்கு... உன் கண்பார்வையின் எல்லையிலிருந்து மீள முடியாமல்...

விண்ணில் மின்னித் திரிந்த மின்மினிப் பூச்சிக்கு, சிறிதாய் கருநிறமிட்டு, உன்னில் திரித்தானோ பிரம்மன், விழிகளாக!

அவள் மைவிழியோடு, கருவிழியை சேர்த்து, கண்ணோடு கண் வைத்து பார்க்கும் போது தான் புரிகிறது, காந்தம் இருப்பது மண்ணிற்க்குள் இல்லை, அவள் கண்ணிற்க்குள் என்று!

நம் முதல் சந்திப்பில், உன் உதடுகளை விட அதிகம் பேசியது உன் கண்களே!
