துரோகம் கவிதைகள்
நம்பி கெட்டு போகாதீர் என்பார்கள்; அதெல்லாம் இல்லை... நம்புங்கள்! அப்போது தானே கெட்டுப்போவது எப்படியென தெரிந்து கொள்ள முடியும்.

உண்மையாக அன்பு வைத்தவர்கள் மகிழ்ந்தார்கள் என்பதை விட, நம்பிக்கை துரோகத்தால் தன்னையும், தன் சந்தோஷத்தையும் இழந்தார்கள் என்பதே யதார்த்த உண்மை.

வாழ்வில் எதையும் ஏற்றுக் கொள்வதில் எந்த பிரச்சனையுமில்லை. யாரை நம்புவது என்பதில் தான் மனம் சிரமமும், குழப்பமும் அடைகிறது.
