அவமானம் தத்துவம் - Avamanam Kavithai Tamil

Avamanam Kavithai in Tamil
வெற்றியை விட அவமானம் தான் ரொம்பவும் மனதை விட்டு அகலாமலே இருக்கிறது!
எப்பொழுது நம்மை ஒருவருக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறதோ, அப்பொழுதே அவர்களை விட்டு விலகி விடுவது நன்று. கூடவே இருந்தால் அவமானம் மட்டும் தான் மிஞ்சும்!
நான் ஒருபோதும் எதையும் அவமானமாக கருதியது இல்லை. ஏனென்றால், வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்!
அவமானம் வலி கவிதை
அவமானம் என்கிற வலி, உன் வாழ்க்கைக்கான வழியைக் காட்டும்!
வெற்றியை விட அவமானம் தான் ரொம்பவும் மனதை விட்டு அகலாமலே இருக்கிறது!
Life Avamanam Quotes in Tamil
அவமானம், தோல்வி, வறுமை இவை எல்லாம் நம்மை நல்ல சிலையாக மாற்றும் சிற்பிகள். அதனால் அவற்றை எண்ணி வருந்தாதீர்கள்! இது தான் அனுபவ பாடம்!
அவமானம் தத்துவம்
உன் உழைப்பில் வாழ்ந்தால் தன்மானம்; அடுத்தவர் உழைப்பில் வாழ்ந்தால் அது அவமானம்
ஒவ்வொரு அவமானத்தை தாங்கும் நம் மனது சில சமயங்களில் அந்த காயத்தை கடந்து செல்கிறது. பல சமயங்களில் அந்த காயத்தின் வலியை அனுபவிக்கிறது!
அவமானம் பற்றிய கவிதைகள்
தோல்வி என்பது அவமானம் அல்ல... வெற்றி என்பது மகுடம் அல்ல... இவ்விரண்டும் வாழ்க்கையை புரிய வைக்கும் பாடங்கள்!
வெற்றி என்னும் படிக்கட்டை தோல்வி, அவமானம் எனும் உளி கொண்டு செதுக்கியவர்களே இன்று உயர்ந்த நிலை அடைந்துள்ளனர்
விரும்பாத இடத்தில் மீண்டும் மீண்டும் அன்பிற்காக அனுமதி கேட்டால், கிடைப்பது அவமாகத்தான் இருக்கும்.
அவமானம் தத்துவ வரிகள்
செதுக்கிக் கொள் உன்னை; உளியால் அல்ல. பட்ட அவமானங்களால்! ஏனென்றால், உளியை விட, பட்ட அவமானங்கள் கூர்மையானது.
நாம் உருகி உருகி அன்பு காட்டினாலும், நமக்குக் கிடைக்கும் பரிசு அவமானமும் கண்ணீரும் தான்.
Avamanam Tamil Quotes
எந்த இடத்தில் நம்பிக்கை குறைகிறதோ, அந்த இடத்தை விட்டு வெளியே வந்து விட வேண்டும். இல்லை என்றால் அவமானம் மட்டுமே மிஞ்சும்.
வாழ்க்கை அவமானம் கவிதை
புகழை மறந்தாலும், நீ பட்ட அவமானங்களை மறக்காதே. அது உன்னை இன்னொரு முறை நீ அவமானம் படாமல் காப்பாற்றும். - ஹிட்லர்
யார் மட்டும் போதும் என்று நாம் நினைக்கிறோமோ, அவங்க நமக்குக் கொடுக்கும் பரிசு, அவமானம் மட்டும் தான்.
தோல்வி அவமானம் கவிதை
தோற்பது அவமானம் அல்ல! தொடங்காமல் இருப்பதே அவமானம்!
நம்மை யார் என்று நமக்கே தெரியப்படுத்தும் ஆயுதம் தான், அவமானம்!
அவமானங்களால் மட்டுமே வாழ்க்கையில் அதிக தெளிவு கிடைக்கிறது. சிலரை, புரிந்துகொள்ளவும் முடிகிறது.
சாகும் நிலையிலும், உறவினர் வீட்டில் சாப்பிட மறுப்பது, என்றோ உறவினர் வீட்டில் பட்ட அவமானத்தால் கூட இருக்கலாம். அவமானம் உறுதி தரும்!
அவமானம் கவலை கவிதை
நம்மை அவமானப் படுத்தும் போது, அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும், அடுத்த நொடியில் இருந்து தான், வாழ்க்கை ஆரம்பம் ஆகிறது.
மரணம் வரை நினைவில் வைக்க வேண்டியவை, மாறும் குணம் கொண்ட மனிதர்களையும், அவர்களால் பட்ட அவமானங்களையும்!
பாராட்டுக்கள் கூட மறந்து போகும். ஆனால் மனது மறப்பதில்லை பட்ட அவமானங்களையும், ஏளனங்களையும்.
அவமானங்களை கண்டு கலங்காதே. அவை உன்னை வாழ்வில் வழி நடத்தும்...
தோல்வி அடையும் போது வெற்றி பெற வேண்டும் என்று மட்டுமே தோன்றுகிறது. அவமானம் அடையும் போது தான் சாதித்து நம் அடையாளத்தை காட்ட வேண்டும் என்று தோன்றுகிறது.
காதல் அவமானம்
தேடிச் சென்று உன் அன்பை நிரூபிக்க நினைக்காதே. ஆசையாய் போனால், அவமானமே மிஞ்சும்!
ஆயிரம் உறவுகளால் தர முடியாத தைரியத்தை, ஒரு அவமானம் வந்துவிடுகிறது!
குமுறி அழுத மனம், அவமான வார்த்தைகளை சுமந்ததால் பாரமானது வாழ்க்கை! இவ்வளவு கடினமா என்ற கேள்வியில் இல்லை என்ற பதிலைத் தந்தது "வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்"
அவமானப்படுத்தும் போது கவலை வேண்டாம். வலித்தால் கொஞ்சம் தாங்கிக் கொள். ஒரு நாள் வாழ்ந்தால் உன்னைப் போல் வாழ வேண்டும் என்று உதாரணம் காட்டுவார்கள். உன் தன்னம்பிக்கைக்கு அவ்வளவு சக்தி உண்டு.
அவமானப்படுறது கேவலப்படுறது அசிங்கம் என்று தெரியுற "நமக்கு" அசிங்கப்படுத்துறதும் அவமானப்படுத்துறதும் "அசிங்கம்" என்று தெரியிறது இல்லை...
ஓரிடத்தில் நீ அவமானப்படுத்தப்பட்டால், அவ்விடத்திலிருந்து நிரந்தரமாகவே விலகிவிடு! அன்பு, பாசம் என மீண்டும் சேர்ந்து நின்றால், உன் அவமானங்கள் நிரந்தரமாகிவிடும்.
அவமானபடுகிறாய் என்றால், நீ முன்னேறிக் கொண்டு இருக்கிறாய் என்று உன் மேல் பெருமை கொள்!
Message